கருப்பு வெள்ளை மலர் | கவியாழினி
கருப்பு வெள்ளை மலர்
🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
இதயம் கனக்கிறது
மனதிற்குள் கட்டிக் கொண்டு....
மனம் இலகுகிறது
இன்பத்தின் வாசல் கண்டு...
விரல் துடிக்கிறது
விரதங்கள் முடித்து கொண்டு...
அவளைத்
தொட்டுக்கொண்டே
இருக்க ஏங்குகிறது..
ஆனால்
மலர் விழியோ மறுக்கிறாள்...
மஞ்சத்திலும்
உன் மார்போடு ஒரு தூக்கம்
அசரீரி கேட்க...
மயக்கத்துடன் கட்டித்
தழுவிக் கொண்டாள்
தான் படித்த
அவள் என்னும் புத்தகத்தை...
✍️கவியாழினி
கருத்துகள் இல்லை